ஒலிம்பிக்ஸ்! மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் வெற்றி!

 
ஒலிம்பிக்ஸ்! மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் வெற்றி!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு ஜூலை 23 முதல் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளன. கடும் கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் யாருமின்றி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் இருந்து சுமார் 11500க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாட்டில் கலந்து கொள்கின்றனர்.

ஒலிம்பிக்ஸ்! மகளிர் குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் வெற்றி!


இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் மேரி கோம் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த முதல் சுற்று வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web