குழந்தை பலியான சம்பவம்... தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் குழந்தை லியா லட்சுமி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணிக்க தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த ஆலோசனை வழங்கிடவும், ஜனவரி 10ம் தேதி திருச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த அன்புக்குழந்தை லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டாவது பெற்றோராக பள்ளி செயல்பட்டு பாதுகாக்க வேண்டியது கடமை. எத்தனையோ கனவுகளை, லட்சியங்களை கொண்டுள்ள அன்புக் குழந்தை லியாலட்சுமியின் பெற்றோரை என்ன வார்த்தை சொல்லி ஆற்றுப்படுத்துவது என்பது தெரியாது தவிக்கிறோம்.
இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகள் தங்கள் உட்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் ஏற்றும்போதும் இறங்கும்போதும் உதவியாளர்கள் பக்க பலமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறு துன்பம் கூட ஏற்படாத அளவிற்கு தாயின் கருணையோடும் தந்தையின் அக்கறையோடும் பள்ளி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும்” என பள்ளித் தாளாளர்களை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!