5வது முறையாக மீண்டும் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!

 
5வது முறையாக மீண்டும் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!


மீண்டும் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பேரறிவாளன் . இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

5வது முறையாக மீண்டும் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!


இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பரோலில் மே 28ல் ஜோலார்பேட்டையில் உள்ள தமது வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்த படியே சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.


ஜூன் 28ல் இந்த பரோல் நீட்டிக்கப்பட்டது. அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு இதுவரை 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.

5வது முறையாக மீண்டும் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!

அந்த பரோல் நீட்டிப்பு இன்றோடு முடிவடைய இருந்தது. இந்நிலையில், அவருக்கு சிகிச்சை மீதமுள்ளதால் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது முறையாகவும் மீண்டும் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

From around the web