பயணிகள் அவதி... கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்... வாராந்திர சிறப்பு ரயில் நேரத்தில் திடீர் மாற்றம்!

கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகர் வரையில் இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் (03680) நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த ரயில் கோவையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.17 மணிக்கு சேலம் சென்றடையும்.
அதன் பின்னர் சேலத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்நிலையில் இணைப்பு ரயில் வருவதில் ஏற்படுகின்ற தாமதம் காரணமாக இந்த ரயில் 16 மணி நேரம் கால தாமதமாக கோவையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!