பென்சன் வாங்குபவரா நீங்கள்?! நவம்பர் 30 க்குள் இதை செய்யலன்னா பென்சன் வராது..!

 
பென்சன் வாங்குபவரா நீங்கள்?! நவம்பர் 30 க்குள்  இதை செய்யலன்னா பென்சன் வராது..!


ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் அரசுக்கு உயிரோடு இருப்பதை உறுதி செய்ய அரசுக்கு ஜீவன் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இதனை நவம்பர் 30ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.இதனை செய்யாவிட்டால் டிசம்பரில் பென்சன் கிடைக்காது.

பென்சன் வாங்குபவரா நீங்கள்?! நவம்பர் 30 க்குள்  இதை செய்யலன்னா பென்சன் வராது..!

சில காலத்திற்கு முன்பு வரை வங்கிகளுக்கும், அஞ்சலகத்திற்கும் அலைய வேண்டியிருந்தது. தற்போது வீடு தேடி சேவையும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.மேலும் இதனை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

பென்சன் வாங்குபவரா நீங்கள்?! நவம்பர் 30 க்குள்  இதை செய்யலன்னா பென்சன் வராது..!

டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஜீவன் பிரமான் ஆப்பினை பதிவிறக்கம் செய்தால் போது. அதில் ஆதார் எண், உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.


இதன் பிறகு பதிவு செய்ததை உறுதி செய்ய மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு சப்மிட் கொடுத்தாலே போதுமானது. இதில் PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் இவைகளை பதிவிட வேண்டும்.

பென்சன் வாங்குபவரா நீங்கள்?! நவம்பர் 30 க்குள்  இதை செய்யலன்னா பென்சன் வராது..!

இத்துடன் ஆதார் எண்ணையும் சமர்ப்பித்து கை ரேகையை ஸ்கேன் செய்தால், ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். இந்த வகையில் ஓய்வூதியதாரர்கள் லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிக்கலாம்.


அஞ்சலகத்தில் தபால்காரர்களிடமும் வீடு தேடி வந்து டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் சேவையை பெறலாம். இதற்கு கட்டணமாக 70 ரூபாய் வசூலிக்கப்படும். இதனை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் தங்கள் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்கலாம்.

From around the web