மக்களே தயாரா இருங்க! இந்த பகுதிகளில் நாளை மின்தடை!

 
மக்களே தயாரா இருங்க! இந்த பகுதிகளில் நாளை மின்தடை!


தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்ப்பிற்காக மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜூலை 27 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இதனையடுத்து நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை நத்தம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும் படியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From around the web