மக்களே உஷார்.. புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் புது மோசடி.. எச்சரித்த காவல்துறை!
தெரியாத எண்களில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்பும் செயலிக்கான APK லிங்க் வந்தால், அதை கிளிக் செய்ய வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த இணைப்பில் உங்கள் பெயரையும் நீங்கள் வாழ்த்து தெரிவிக்க விரும்பும் நபரின் பெயரையும் உள்ளிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பலாம் என்று தெரியாத நபர்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்துச் செயலிக்கான இணைப்பைப் பெற்றால், அதைக் கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்களின் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது என போலீசார் எச்சரித்துள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் இதுவரை சூழ்நிலைக்கு ஏற்ப பல மோசடிகளை அரங்கேற்றி வரும் நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வரும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட தகவலில், இணையதளத்தில் தற்போது செயல்படும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி எல்லா இடங்களிலும் நடந்து வருகிறது. இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்றால், உங்களுக்கு தெரியாத எண்ணிலிருந்து உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு apk file அல்லது லிங்க் செய்தி வந்தால், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த apk file திறந்தால், உங்கள் போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களையும் அறிந்து பண மோசடி செய்வார்கள். எனவே, வாட்ஸ்அப்பில் இதுபோன்ற அறிமுகமில்லாத எண்களில் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதிர்பாராதவிதமாக இதுபோன்ற பண மோசடிக்கு ஆளானால், சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக புகாரைப் பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!