10 வருஷமா மின் இணைப்பு கிடையாது! மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

 
10 வருஷமா மின் இணைப்பு கிடையாது! மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த துறையூரில் பெருமாள் மலை அடிவாரம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 10 ஆண்டுகளாக மின் இணைப்பு தரச்சொல்லி பல முறை கோரிக்கி விடுத்தும் இது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

துறையூரில் சொரத்தூர் ஊராட்சியில் பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் எம்.ஜி.ஆர். நகர் அமைந்துள்ளது. இங்குள்ள 15 வீட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கப்பட வில்லை. இது குறித்து துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 10 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

10 வருஷமா மின் இணைப்பு கிடையாது! மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

இந்த காரணங்களின் அடிப்படையில் பெருமாள் மலை அடிவாரத்தில் பெரம்பலூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதி பரபரப்படைந்து சுமார் 1மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web