நடிகையை மணக்கிறார் கவிஞர் சினேகன்! கமல் முன்னிலையில் திருமணம்!

 
நடிகையை மணக்கிறார் கவிஞர் சினேகன்! கமல் முன்னிலையில் திருமணம்!

தமிழ் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தை பிடித்த கவிஞர் சினேகன். இவர் தற்போது சினிமாவைத் தவிர மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளார்.

இவர் ஜூலை 29 ம்தேதி காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்கிறார். இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். சினேகனும், கன்னிகாவும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். தற்போது இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளனர்.

நடிகையை மணக்கிறார் கவிஞர் சினேகன்! கமல் முன்னிலையில் திருமணம்!

அனைவராலும் மிகச்சிறந்த பாடலாசியராக அறியப்படும் சினேகன் பாண்டவர்பூமி, மௌனம் பேசியதே, ஆட்டோகிராப், ராம் , பருத்திவீரன் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்.

யோகி, உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் சினேகன் நடித்துள்ளார். தற்போது மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணிச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

From around the web