பெரும் சோகம்... காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பலி!
வேலூர் மாவட்டம் மோத்தகல் கிராமத்தில் வசித்து வருபவர் 52 வயது பலராமன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் மோத்தகல் திரும்பிக் கொண்டிருந்தபோது ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா கிராமம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!