மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார்!! தேசிய கீதத்தை அவமதித்தாக வழக்கு!!

 
மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார்!! தேசிய கீதத்தை அவமதித்தாக வழக்கு!!

மேற்க வங்க முதல்வரான மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதிப்பு செய்ததாக கூறி மும்பை பா.ஜ.க தலைவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார்!! தேசிய கீதத்தை அவமதித்தாக வழக்கு!!

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடியதாகவும், பின்னர் எழுந்து நின்று பாடலை பாடாமல் பாதியில் நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மும்பையை சேர்ந்த பா.ஜ.க தலைவர் தேசிய கீதத்தை அவமதித்ததற்காக மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க மாநில பாஜக தலைவர் அமித் மாளவியா , “நமது தேசிய கீதம் நம் தேசத்தின் அடையாளம். பொது பதவியில் இருப்பவர்கள் அதை இழிவுப்படுத்த கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். மம்தாவின் இந்த செயலுக்கு தற்போது மேற்கு வங்க பா.ஜ.க தலைவர்களும், நிர்வாகிகளும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web