கட்டுமான பணியின்போது மயங்கி விழுந்த வாலிபர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டுமான பணியின் போது மயங்கி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி டூவிபுரம் மூன்றாவது தெருவில் ஒரு வீட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் திருச்சியை சேர்ந்த ஜான் பீட்டர் மகன் டேனியல் கிஷோர் (24) என்பவர் சென்ட்ரிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்து டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!