மணிரத்னம் படைப்பில் ’பொன்னியின் செல்வன்’ போஸ்டர் வெளியீடு!

 
மணிரத்னம் படைப்பில் ’பொன்னியின் செல்வன்’ போஸ்டர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் மணிரத்னம். இவருடைய அடுத்த படைப்பாக தயாராகி வருகிறது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.இந்த நாவலை படமாக்குவது தனவு பெருங்கனவு என்று இயக்குநர் மணிரத்னம் பலமுறை தெரிவித்து வந்தார்.

தற்போது அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா என நட்சத்திரப் பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

மணிரத்னம் படைப்பில் ’பொன்னியின் செல்வன்’ போஸ்டர் வெளியீடு!

ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. போஸ்டரில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ 2022ல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி உட்பட இந்த படத்தில் நடித்துள்ள திரைப்பிரபலங்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளனர்.

From around the web