தங்களது வாக்கை பதிவு செய்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று பிப்ரவரி 4ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வாக்களித்தனர்.
தலைநகரான டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, டெல்லி காவல் துறை ஆணையர் சஞ்சய் அரோரா, டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர். ஆலிஸ் வாஸ், தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, அவரது மனைவி சங்கீதா சக்சேனா ஆகியோரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆம் ஆத்மி கட்சியின் கைலாஷ் தொகுதி வேட்பாளர் சௌரப் பரத்வாஜ், பாஜகவின் கரவால் நகர் வேட்பாளர் கபில் மிஸ்ரா, காங்கிரஸின் புது தில்லி வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் மற்றும் கல்காஜி வேட்பாளர் அல்கா லம்பா அனைவரும் தங்களது தொகுதிகளில் வாக்களித்தனர். காலையில் பனிப்பொழிவால் வாக்குப் பதிவு மந்தமாகக் காணப்பட்டது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!