தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்க... ஜெயக்குமார் ஆவேசம்!

 
ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக ஆட்சியில் தினமும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், அல்லல்படுகிறார்கள். உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்  ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை கவனிக்கவில்லை.

ஜெயக்குமார்

உயிருக்கு பாதுகாப்பில்லை என ஏடிஜிபி கூறும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. திருப்பரங்குன்றம் பிரச்சனையை முதலிலேயே பேசித் தீர்த்திருக்க வேண்டும். மத ரீதியான மோதல் வராமல் தடுப்பதே அரசின் கடமை. அரசு தூங்காமல் விழித்துக்கொள்ள வேண்டும்.

சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும். ஈசிஆர் விவகாரத்தில் திமுக அரசின் அழுத்தம் காரணமாக போலீசார் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர்.  ஈசிஆர் விவகாரத்தை மூடி மறைப்பதற்காக இந்த திரைப்பட வசனம் எழுதப்பட்டிருக்கிறது. வேங்கைவயலுக்கு செல்ல இனி பாஸ்போர்ட் தேவை. எம்.ஜி.ஆரை விஜய் புகழ்வதால் அ.தி.மு.க-தான் பலமடையும்” எனக் கூறியுள்ளார். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web