தனியார் விடுதியில் ஜோராக நடந்த பாலியல் தொழில்.. விசாரணையில் வெளிவந்த உண்மை.. ஷாக்கில் காவல்துறை!

 
சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி கர்ஷகா சாலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு, ஏராளமான ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதால், அப்பகுதி மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து விடுதியில் விபச்சார தொழில் நடைபெறுவதை அறிந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எர்ணாகுளம் மாவட்ட விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

விபச்சாரம்

சோதனையின் போது, ​​கொல்லம் நகரைச் சேர்ந்த ராஷ்மி மற்றும் அவரது உதவியாளர்கள் ரிஜோ மற்றும் மார்ட்டின் ஆகியோர் விடுதியில் உள்ள ஒரு அறையில் இருந்தனர். மற்றொரு அறையில் இரு இளம்பெண்கள் தங்க வைக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து ராஷ்மி, அவரது உதவியாளர்கள் ரிஜோ, மார்ட்டின் உள்பட 3 பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில், இரண்டு போலீசார் விபச்சார தொழில் நடத்தி வருவது தெரியவந்தது. இதை முதலில் நம்ப மறுத்த போலீசார் அவர்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பாலாரி வட்டம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரிஜேஷ் லாலுக்கும், எர்ணாகுளம் கிழக்கு போக்குவரத்து காவல் நிலைய டி.கே.ரமஷன் ஆகிய இருவருக்கும் தங்களது இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் அனுப்பியது தெரியவந்தது. 

போலீஸ்

இதைத்தொடர்ந்து இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதால், இருவரையும் சஸ்பெண்ட் செய்து கொச்சி மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web