முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி: உபரிநீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

 
புழல் ஏரி

சென்னைக்கு முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாகத் தற்போது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புழல் ஏரி

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். ஏரி முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரி

ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் விநாடிக்கு 100 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஏரியின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!