அதிக எதிர்பார்ப்பில் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’!

 
அதிக எதிர்பார்ப்பில் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’!

பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

அதிக எதிர்பார்ப்பில் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’!

பாகுபலி திரைப்படம் நடிகர் பிரபாஸை உலக முழுவதும் பிரபலமாக்கியது. இதனையடுத்து அவர் நடிக்கும் படங்களின் பட்ஜெட் மட்டுமல்ல ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் ரிலீஸுக்குகாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ‘திரையோடு தூரிகை’ பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பாடல் யூ-டியூபில் டிரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘ராதே ஷ்யாம்’ உருவாகியுள்ளது. முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது. ராதே ஷ்யாம் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

From around the web