தடுப்பூசி போட்டவங்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள்!! தமிழக அரசின் அதிரடி செக்!!

 
தடுப்பூசி போட்டவங்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள்!! தமிழக அரசின் அதிரடி செக்!!


தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. வாரம் ஒரு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய உருமாறிய வகை வைரஸ் ஒமிக்ரான் பரவி வருகிறது.

தடுப்பூசி போட்டவங்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள்!! தமிழக அரசின் அதிரடி செக்!!

இதனையடுத்து விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை, மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றன. மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டவங்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள்!! தமிழக அரசின் அதிரடி செக்!!


கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து தமிழக பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரேஷன் கடைகளில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் பொருட்களை வழங்க உத்தரவி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

From around the web