கடல் சீற்றம் , கனமழை ... காசிமேடு கடலோர பகுதிகளுக்கு செல்ல தடை!

 
கடல் சீற்றம்

சென்னையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் தற்போது கனமழை மற்றும் கடல் சீற்றம் காணப்படுகிறது. வழக்கமாக அமைதியாக இருக்கும் கடல், தற்போது சீற்றமான நிலையில் உள்ளது.

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைப் பின்பற்றி, ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் படகுகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டு, மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல், படகுகளில் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய படகுகளில் உள்ள மீனவர்கள் மட்டுமே கரையிலிருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு சென்று சிறிய அளவில் மீன் பிடிக்கின்றனர்.

கடல் படகு மீனவர்கள் மீன்

மேகக் கூட்டங்களால் நகரின் பல பகுதிகளில் மழை பதிவாகி வருகிறது. கடல் சீற்றம் மற்றும் மழையின் காரணமாக, கடற்கரை, மீன்பிடி துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளுக்குத் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பொதுமக்களை அவசியமற்றவாறு கடலோர பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!