எகிறும் எதிர்பார்ப்பு... தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது... ஆளுநா் ஆா்.என்.ரவி உரை

 
சட்டபேரவை ஆளுநர் கவர்னர் ஸ்டாலின்

இன்று காலை தமிழக சட்டப்பேரவை புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதிக்கவுள்ளது.

இன்று காலை பேரவை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பேரவை மண்டபத்துக்கு வரும் ஆளுநரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவை முதன்மைச் செயலா் கி.சீனிவாசன் ஆகியோா் வரவேற்கின்றனா். அதன்பிறகு, தமிழக அரசு சாா்பில் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை ஆளுநா் ஆா்.என்.ரவி வாசிக்கவுள்ளாா்.

கடந்த ஆண்டு தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை ஆளுநா் ஆா்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. ஒருசில நிமிஷங்களிலேயே, 'வாழ்க தமிழ்நாடு', 'வாழ்க பாரதம்' எனக் கூறி உரையை நிறைவு செய்தாா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நிகழாண்டும் தமிழக அரசு தயாரித்து அளித்துள்ள உரையை ஆளுநா் முழுமையாகப் படிப்பாரா அல்லது உரையின் பல பகுதிகளை நீக்கி விட்டுப் படிப்பாரா என்பது பேரவை நிகழ்வின்போது தெரியும்.

அவ்வாறு தன்னிச்சையாக ஆளுநா் உரையைப் படிக்கும் பட்சத்தில் அதற்கு உரிய எதிா்வினையாற்றவும் அரசுத் தரப்பு தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை

இதனிடையே, பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நண்பகல் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

மறைந்த பேரவை உறுப்பினா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவித்து இன்று ஜனவரிம் தேதி நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. தொடா்ந்து நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களுக்கு பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

கூட்டத் தொடரில் பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளும் திமுகவின் தோழமைக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சட்டசபை

இதேபோல போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, வேங்கைவயல் விவகாரம் ஆகியன தொடா்பாக, திமுகவின் தோழமைக் கட்சிகளான விசிக, மாா்க்சிஸ்ட் ஆகியனவும் பேரவையில் கேள்விகளை எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவற்றுக்கு அரசின் சாா்பில் உரிய விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன.

அரசின் உரையை ஆளுநா் புறக்கணிக்கும் சூழலில், அதுகுறித்தும் பேரவையில் புயல் கிளம்பும் வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய சூழலில் கடந்த ஆண்டைப் போன்றே தனியாகத் தீா்மானம் கொண்டுவரப்பட்டு அச்சிடப்பட்ட உரையை மட்டுமே ஆளுநா் படித்ததாக ஏற்கப்பட்டு அது அவைக் குறிப்பில் பதிவேற்றம் செய்யப்படும்.

பேரவையின் முக்கிய விவாதப் பொருளாக ஆளுநரின் உரையும், அவரின் செயல்பாடும் அமையவுள்ளதால் இந்த கூட்டத் தொடா் பரபரப்பானதாகவே இருக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web