இன்று பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்... பக்தர்களே உஷார்!

 
ரோப் கார்

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு  மலையேறிச் செல்லப் பயன்படுத்தப்படும் ரோப் கார் சேவை இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முருகனின் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்றது திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலை மீது அமைந்துள்ள இந்த மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்ல ரோப் கார், மின் இழுவை ரயில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.   இதில் ரோப் காரில் 3 நிமிடங்களில் மலைக்கோயிலை அடையலாம்.

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

இதனால் ரோப் காரில் அதிக அளவில் பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு மாதமும்  ரோப் கார் பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சமயத்தில்  ரோப் காரை இயக்கும் மோட்டார், பற் சக்கரங்கள், ஷாப்டுகள் என அனைத்து பாகங்களும் தீவிரமாக பரிசோதனை செய்யப்படும்.

ரோப்கார்

அந்த வகையில் இன்று ஜனவரி 30ம் தேதி வியாழக்கிழமை  பராமரிப்புப் பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனையடுத்து  பக்தர்கள் வின்ச் ரயில், படிப் பாதை மற்றும் யானைப் பாதையை பயன்படுத்தி மலைக் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web