கோயில் அர்ச்சர்களுக்கு மாதம் ரூ.18,000/- உதவித் தொகை!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகிறது. அதன் படி ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18000 உதவித்தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அதே போல் மகளிரும் மாதம் ரூ.1000 ஜங்புரா தொகுதிக்கான கல்வி எனத் தொடர்ச்சியாகத் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.
ஆம் ஆத்மி கட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தக் கோயில் அர்ச்சகர்களுக்கு மற்றும் குருத்வாராவின் கிராந்திகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.18,000 வழங்கப்படும் அர்ச்சகர்கள் மற்றும் கிராந்திகள் நமது சமூகத்தின் முக்கிய அங்கம். ஆனால் அவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினராகவே இருந்து வருகின்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாகக் கிராந்தி சமூகத்திற்கு ஆதரவளிக்கும் திட்டம் "பூஜாரி கிராந்தி சம்மன் யோஜனா" திட்டத்தை ஆம் ஆத்மி அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக ரூ. 18,000 பெறுவார்கள்.
இந்த திட்டத்திற்கான பதிவு நாளை முதல் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களுக்கான பதிவு செயல்முறையை மேற்பார்வையிட உள்ளதாகவும் கூறியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த அறிவிப்பை வெளியிட்டு தலைநகரில் தொடர்ந்து 4 வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!