அதிர்ச்சி... கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணம்!

 
கிரிக்கெட்
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற போட்டியில், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, ரன் எடுக்க ஓடிய இளைஞர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் ஜான்சன் (46), நில புரோக்கர்.  இவருக்கு 
திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

கிரிக்கெட்

கிரிக்கெட் வீரரான இவர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மீளவிட்டான் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார்.  

இந்நிலையில், போட்டியின் போது ரன் எடுக்க ஓடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இது குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப்பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web