இன்று சாயி நாதனின் ஆசி உண்டு!உங்கள் நிழலாக சாயி இருப்பார்!

 
இன்று சாயி நாதனின் ஆசி உண்டு!உங்கள் நிழலாக சாயி இருப்பார்!


ஷீரடி சாயிபாபாவின் தீவிரமான பக்தர்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து அவருடைய வழிகாட்டுதலின் படி அவரை வணங்கி வருகின்றனர். ஷீரடியில் பாபாவின் காலடி படாத இடமே இல்லை என்னும் அளவிற்கு புண்ணிய தலமாக மாறியுள்ளது. அவர் துவங்கி வைத்த எத்தனையோ சேவைகளை இன்றைக்கும் எந்தவிட தடங்கலும் இல்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது.

இன்று சாயி நாதனின் ஆசி உண்டு!உங்கள் நிழலாக சாயி இருப்பார்!

அவருடைய ஆதரவாளர்களும், பக்தர்களும் தொடர்ந்து நடக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.பாபா, தினமும் எத்தனையோ வேதனைகளுடனும் துன்பங்களுடனும் கண்ணீருடன் வரும் தன் அன்பர்களுக்கு இப்போதும் ஆத்ம ரூபமாக நல்வழி காட்டிக் கொண்டேயிருக்கிறார். ‘துன்பம் வந்துவிட்டது என்றோ ‘என்னிடம் பணமில்லையே’ என்றோ அந்த பணத்தை எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்றோ பதட்டம் கொள்ளாதீர்கள்.

இன்று சாயி நாதனின் ஆசி உண்டு!உங்கள் நிழலாக சாயி இருப்பார்!

பொறுமையாக இருந்து செயல்படுவது மட்டுமே மிக முக்கியமான வழி .
எதையும் பொறுமையாகவும் நிதானத்துடனும் கையாண்டு, வேலையிலும், தொழிலிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படத் துவங்குங்கள். அந்த நேரங்களில் நான் கூடவே இருக்கிறேன்.உங்கள் கஷ்டங்களை என்னிடம் கொடுத்துவிட்டு வேலையை துவங்குங்கள்.

என்னிடம் கவலைகளையும், துக்கங்களையும் இறக்கி வைத்த பிறகு சோகத்தை விட்டுவிட்டு வேலைகளில் கவனம் செலுத்துங்கள். என் பக்தர்கள் பயணிக்கும் இடங்களுக்கெல்லாம் நிழலாக நானும் வருகிறேன். உங்களின் சந்தோஷங்களுக்காக நான் அருள்புரிவேன்.என்னிடம் சரணடைந்தவர்களின் நிழலாக, தொடர்ந்து கொண்டே இருக்கிறேன். என் பக்தர்களால் என்னை உணர முடியும் என்கிறார் ஷீரடி சாயிபாபா.

From around the web