சாத்தான்குளம் எஸ்.ஐ. பணியின் போது திடீர் மரணம்... காவலர்கள் சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜ், காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு காலமான சம்பவம் காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜ் (59) நேற்று மாலை 5.45 மணிக்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி வந்ததை அடுத்து சாத்தான்குளம் பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காவல் ஆய்வாளர் ராஜ் ஏற்கனவே திசையன்விளை ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றியவர். அவருக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்வும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அவரது சொந்த ஊர் திருநெல்வேலி நகரம் ஆகும். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜ் காலை சாத்தான்குளம் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணிகளையும் ஆய்வு செய்து விட்டு மாலை பணியில் இருந்த போது திடீரென இறந்த சம்பவம் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!