ஜனவரி 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!
![விடுமுறை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/8e5e0205272971ede0253a9d2afa1463.jpg)
நேற்று புத்தாண்டு தொடங்கிய நிலையில் மாணவர்கள், அலுவலக பணிபுரிபவர்கள் அனைவருமே காலெண்டர் வாங்கியதும் எத்தனை நாட்கள் விடுமுறை என்று தான் பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் ஜனவரி மாதம் என்றாலே எல்லோருக்குமே குஷி தான். அந்த வகையில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என அடுத்தடுத்து லீவு தான். அத்துடன் ஸ்ரீரங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 15, 16 ம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. தொடர் விடுமுறையை அடுத்து குடும்பம் குடும்பமாக சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகை இந்தாண்டு செவ்வாய் கிழமை வருகிறது. எனவே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது மட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகை தொடக்கத்திலையோ அல்லது இறுதியிலோ கூடுதலாக ஒரு நாள் அரசு விடுமுறை கிடைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் பொங்கல பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
இதன் படி வைகுண்ட ஏகாதசி திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10 ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!