இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு... அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்!

 
பொன்னம்பலம்

குன்றத்தூரில் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  விவாகரத்தில் வீட்டின் உரிமையாளரும், குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான பொன்னம்பலம் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். 


இந்நிலையில், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பு உட்பட கட்சியில் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் பொன்னம்பலத்தை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தன்னுடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பெண்களை மிரட்டி பொன்னம்பலம் பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில், வீட்டை காலி செய்துக்  கொண்டு அந்த பெண்கள் வேறு இடத்திற்கு சென்ற நிலையிலும், செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொன்னம்பலம் அதிமுக பாலியல்

இந்நிலையில் இன்று காலை அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அந்த பெண்கள் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் அவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததில், பாதிக்கப்பட்ட பெண்களின் தோழிகள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடைப்பக் கட்டையால் அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பொன்னம்பலத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web