ஷாரூக்கான் மகனுக்கு ஜாமீன் மறுப்பு!

 
ஷாரூக்கான் மகனுக்கு ஜாமீன் மறுப்பு!


பாலிவுட்டின் கதாநாயகர்கள் பட்டியலில் முண்ணனியில் இருந்து வருபவர் ஷாரூக்கான். இவரது மகன் ஆர்யன் கான். இவர் சமீபத்தில் கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பலில் பயணம் செய்தார். இந்த கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட 17 பேரை போதைப்பொருள் கடத்தல் பிரிவு அதிரடியாக கைது செய்தது.

ஷாரூக்கான் மகனுக்கு ஜாமீன் மறுப்பு!

இவர்களில் 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை என்சிபி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. 11 ம் தேதி தங்களின் காவலிலேயே வைத்து விசாரிக்க என்சிபி கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டது.

ஷாரூக்கான் மகனுக்கு ஜாமீன் மறுப்பு!


தற்போது இவர்களை அக்டோபர் 21 வரை அதாவது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு இன்று அக்டோபர் 8ம் தேதிக்கு விசாரணைக்கு வந்தது.

ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க முடியாது என என்.சி.பி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஆர்யன் கானின் ஜாமின் மனுவை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

From around the web