அதிர்ச்சி... 11 வயது சிறுமி மூச்சுத் திணறலால் பலியான சோகம்!
எலக்ட்ரிக் பைக் சார்ஜ் போடப்பட்ட நிலையில், தீப்பிடித்த எரிந்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தியப்பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் வசித்து வருபவர் பகவத் மௌரியா. இவரது வீட்டில் இருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இரவு சார்ஜ் போட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், இந்த பைக் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் அவரது 11 வயது பேத்தி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மற்றொரு வாகனத்திற்கும் தீ வேகமாக பரவியது. அதிகாலை 2.30 மணிக்கு தீ விபத்து நடந்ததால் குடும்பத்தினர் யாரும் அதை கவனிக்கவில்லை. அதன் பிறகு தீ முழுவதும் பற்றி எரிந்து வீட்டிற்குள் புகை மூட்டம் ஏற்பட்ட பின்னர், தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் பகவதி மௌரியாவின் 11 வயது பேத்தி அன்ட்ரா மூச்சு திணறலால் அவதிப்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இவர்களுடன் பகவதி மௌரியா, லாவண்யா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆன்ரா தனது தாயுடன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தார். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் ஆன்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!