அதிர்ச்சி.. தறிகெட்டு ஓடி கோர விபத்து ஏற்படுத்திய கார்.. 4 பேர் படுகாயம்!
சென்னை வேளச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற கார், ஆட்டோ, இருசக்கர வாகனம், இளநீர் கடை வைத்திருந்த முச்சக்கரவண்டி மீது மோதியதில், நடந்து சென்றவர், இளநீர் கடை உரிமையாளர் உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னை வேளச்சேரியில் 100 அடி சாலையில் வேகமாகச் சென்ற கார், வாகனங்கள் மீது மோதியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கார் டிரைவர் பிரகதீஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை, விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்திய பிரகதீஷ் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் குடிபோதையில் இருந்தாரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!