அதிர்ச்சி... பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு... அலறியடித்து ஓடிய மாணவர்கள்!

 
பாட்னா குண்டுவெடிப்பு

பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பாட்னா பல்கலைக்கழகத்தில் வருகிற மார்ச் 29ம் தேதி மாணவர் அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த நாளான மார்ச் 30ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பொருளாதார துறை பகுதியில் நூலகத்திற்கு வெளியே நேற்று திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்ததும் அந்த பகுதியில் இருந்த மாணவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பியோடினர். இதில் பக்கத்தில் நின்றிருந்த சொகுசு காரின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

அந்த நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்தன. சமஸ்கிருத துறையின் பேராசிரியர் லட்சுமி நாராயணன் என்பவரின் கார் அது. இந்த சம்பவத்திற்கான பின்னணி பற்றியும், குண்டுவெடிப்புக்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்னா குண்டுவெடிப்பு

இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் கூறுகையில், “ஒழுங்கீனத்துடன் நடந்து கொள்ளும் மாணவர்களாலோ அல்லது வரவுள்ள மாணவர் தேர்தலையொட்டியோ இந்த தாக்குதல் நடந்திருக்க கூடும்” என்றனர். 

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தடயவியல் அதிகாரிகளும் வந்து குண்டுவெடிப்புக்கு பின்னர் மீதம் கிடைத்தவற்றை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திட்டமிட்டப்படியே வருகிற மார்ச் 29ம் தேதி மாணவர் அமைப்பு தேர்தல் நடத்தப்படும் என்றும் அதன் முடிவுகள் அடுத்த நாளான 30ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web