அதிர்ச்சி! இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகள் மூடப்படும்!

 
அதிர்ச்சி! இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகள் மூடப்படும்!


வாகன தயாரிப்பு நிறுவனங்களில் முண்ணனியில் இருப்பது ஃபோர்டு நிறுவனம் . அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் சென்னையில் இதன் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் பல இடங்களில் அதன் கிளைகள் உள்ளன.

அதிர்ச்சி! இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகள் மூடப்படும்!

இந்நிலையில், இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகளை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அமல்படுத்த காலதாமதமாகலாம் எனவும், இது குறித்த தகவலை எகனாமிக் டைம்ஸ் முதல்முறையாக வெளியிட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவலை ஃபோர்டு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி! இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகள் மூடப்படும்!


இருப்பினும், இந்தியாவில் இறக்குமதி மூலம் கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்யும் எனவும், காரை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

From around the web