நள்ளிரவில் அதிர்ச்சி.. கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 3,000 கோழிகள் துடி துடித்து பலி!
வத்தலக்குண்டு அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3,000 கோழிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சித்தரேவு கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன். இவர் சித்தையன்கோட்டை பகுதியில் கோழிப்பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரது கோழிப்பண்ணையின் மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நிமிடங்களில் கோழிப்பண்ணை முழுவதும் தீ பரவியது.
தகவல் கிடைத்ததும் ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், 3,000க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி இறந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், வருவாய்த்துறை மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!