அதிகாலையில் அதிர்ச்சி... பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து... 4 பேர் சம்பட இடத்திலேயே பலியான சோகம்!
இன்று அதிகாலை ராணிப்பேட்டை அருகே மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் சென்றுக் கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதில் பக்தர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை ராணிப்பேட்டை அருகே லாரி மற்றும் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்றுக் கொண்டிருந்த பேருந்து மீது சென்னையை நோக்கி காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வாலாஜாபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!