அதிர்ச்சி! செங்கோட்டைக்குள் நுழைய தடை!!

 
அதிர்ச்சி! செங்கோட்டைக்குள் நுழைய  தடை!!

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுதந்திர தினத்திற்கு முன்பு ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2019ல் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆகஸ்டு 5ம் தேதி டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில் ஆள் இல்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேசன் ஜிகாத் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த தாக்குதலை டெல்லியில் நடத்த கூடும் என கூறப்படுகிறது.

இது தவிர உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா இயக்கத் தீவிரவாதிகள் சுதந்திர தினத்தில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 22 முதல் ஆகஸ்டு 15சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடையும் வரை டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக இந்த தொல்லியல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

From around the web