புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிர்ச்சி.. கூட்டத்தின் மத்தியில் புகுந்த கார்.. 10பேர் பலியான சோகம்!

 
லூசியானா விபத்து

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தன. அப்போது திடீரென ஒரு கார் மக்கள் கூட்டத்தின் மீது அதிவேகமாக வந்து மோதியது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிவேகமாக மக்கள் மீது மோதிய காரை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுடத் தொடங்கினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து நியூ ஆர்லியன்ஸ் காவல் துறை (என்ஓபிடி) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையின்படி, ஒரு கார் கூட்டத்தின் மீது மோதியிருக்கலாம். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது," என்று அவர் கூறினார். விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள போர்பன் தெருவில் கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது. அவசரகால குழுக்கள் நெருக்கடியை கையாள்வதால் தற்போதைக்கு அப்பகுதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு  போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web