குட் நியூஸ்! இயல், இசை, நாடக மன்ற தலைவராகும் சாலமன் பாப்பையா..!
Jul 26, 2021, 14:15 IST
தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் தமது பட்டிமன்றங்களை நடத்தி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. தமிழகத்தின் இயல் இசை நாடக மன்ற தலைவராக இருப்பவர் இசையமைப்பாளர் தேவா. இவரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நியமனம் செய்தார்.
தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இயல் இசை நாடக மன்ற தலைவர் பொறுப்பிற்கு பேராசிரியர் சாலமன் பாப்பையாவை மு.க.ஸ்டாலின் தேர்வு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜூலை 22ம் தேதி, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சாலமன் பாப்பையா சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது
From around the
web