தென்கொரிய விமான விபத்து.. பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் ஏர் நிறுவன சிஇஓ!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் விமானம் தென் கொரியாவின் முவான் நகருக்கு வந்து கொண்டிருந்தது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்கும் போது தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக விமானம் வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் 85 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விமான விபத்தில் 2 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 179 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இருவரைத் தவிர, விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விமான விபத்தை சமாளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக ஜெஜூ ஏர் சிஇஓ கிம் இ-பே தெரிவித்துள்ளார். அதன்படி, Jeju Air CEO Kim E-bae, ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த தலைவணங்கி, விபத்துக்காக மன்னிப்பு கேட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிப்பதே எங்களது முன்னுரிமை. விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது, விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் அரசு நிறுவனங்களின் உத்தியோகபூர்வ விசாரணைக்காக நாம் காத்திருக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், தலைமை நிர்வாக அதிகாரியாக நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!