இன்று டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!!

 
இன்று டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!!


கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வது வழக்கம். இந்த நேரங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உத்தேசித்துள்ளது.


இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இன்று டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!!


இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும். டிசம்பர் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 10, 12, 14 தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.


அதே போல் மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 11, 13, 16ம் தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடையும்.


சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23ல் மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாகர்கோயிலுக்கு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும்.


டிசம்பர் 24ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். டிசம்பர் 26ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!!


அதே போல் டிசம்பர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web