இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே!

 
இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே!


இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக மக்களின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. மற்ற வழித்தடங்களில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சரக்கு ரயில் சேவை மட்டும் இயங்கி வந்தது. கொரோனா 2வது அலை பாதிப்புகள் குறைந்து காணப்படும் சூழலில் குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே!


இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்புகளால் வழக்கமாக இயங்க வேண்டிய விரைவு ரயில்கள், இன்னும் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், தேவையை கருத்தில் கொண்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு! தெற்கு ரயில்வே!


அந்த வகையில், சென்னை சென்ட்ரல்-கயா (02390/02389), பாருனி-எர்ணாகுளம் (02521/02522), பாடலிபுத்தூர்-யஸ்வந்த்பூர் (03251/03252), தர்பாங்கா-மைசூர் (02577/02578), முஜாபர்பூர்- யஸ்வந்த்பூர் (05228/05227) ஆகிய 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில்கள், மறு அறிவிப்பு வரும் வரை தற்போது இயக்கப்படும் அதே நேரத்தில், அதே வழித்தடத்தில் இயக்கப்படும் எனவும், இவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

From around the web