ஸ்டாலின் திருச்சி செல்கிறார்! கல்லணையில் திடீர் ஆய்வு!

 
ஸ்டாலின் திருச்சி செல்கிறார்! கல்லணையில் திடீர் ஆய்வு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் கல்லணைகால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிற்கு திருச்சியை அடுத்த குழுமணி அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கொடிங்கால் வாய்க்காலின் தலைப்பு பகுதி புலிவலம் மணல் போக்கியில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வை யிடுகிறார்.

சுற்றுலா மாளிகையில் மதிய உணவுடன் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு சிறப்பு விமானம் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார். மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகையையொட்டி திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. முதல்வர் பார்வையிடும் இடங்களில் அவரது பாதுகாப்பிற்காக அதிகாரிகள் நேற்று ஏற்கனவே பார்வையிட்டு விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web