நாளை முதல்வர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணம்?

தமிழகத்தில் மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க 2024 நவம்பா் மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு ஏலத்தின் மூலம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சட்டப்பேரவையிலும் தனித்தீா்மானம் நிறைவேற்றியது.
தொடர்ந்து, தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தலைமையிலான பாஜக குழுவினா், அரிட்டாபட்டி அம்பலக்காரா்களுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை ஜனவரி 22 ல் சந்தித்து சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனா். திட்டத்தை ரத்து செய்வது குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என அமைச்சா் கிஷண் ரெட்டி உறுதியளித்தாா்.
இதனையடுத்து அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு ஜனவரி 23 ம் தேதி அறிவித்தது. இதனை அரிட்டாப்பட்டி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை ஜனவரி 26 ம் தேதி அரிட்டாபட்டி செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலையில் குடியரசு தின நிகழ்வுகள் முடிந்ததும் விமானம் மூலமாக மதுரை செல்லும் அவர், சாலை வழியாக அரிட்டாபட்டி சென்று அங்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!