சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

 
சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைப்பெற உள்ள நிலையில், முதல் கட்சியாக ஆர்வமுடன் களத்தில் இறங்குகிறது பாஜக. அதன் தேசிய தலைவர்களின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியான நிலையில், சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளைத் பாஜக துவங்கியுள்ளது, 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

அதன்படி உத்திர பிரதேசத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், உத்தரகாண்டுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் சிங் ஜோஷியும், பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவை ஆகியோரை தேர்தல் பொறுப்பாளராக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நியமித்துள்ளார்.

From around the web