சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் 19000 போலீசார்... புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!
நாளையுடன் 2024ம் ஆண்டு முடிவடைய உள்ளது.நாளை மறூநாள் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும், முன் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாதுகாப்பு பணியில் 19,000 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்குகள் செயல்படும். வாகன பந்தயத்தை தவிர்க்க 30 சோதனை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை கட்டுப்பாடு விதிகளை விதித்துள்ளது. அதன்படி ” சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு பாதுகாப்புக்காக சென்னையில் 19,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாளை டிசம்பர் 31ம் தேதி இரவு 9 மணியிலிருந்து 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பைக் ரேஸ் நடக்காமல் தடுக்க 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 31 மாலை முதல் ஜனவரி 1 வரை கடற்கரையில் குளிக்கவோ, இறங்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!