சண்டே ஸ்பெஷல்: மணமணக்கும் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?!
இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு ஏற்ற மணமணக்கும் மற்றும் சுவையான மீன் குழம்பைச் சுலபமாக எப்படிச் செய்வது என்று பார்க்கலாம். இது பேச்சுலர்ஸ் உட்பட அனைவரும் முயற்சி செய்யக்கூடிய செய்முறை ஆகும்.
தேவையான பொருட்கள்:
மீன் - துண்டுகள் 12
சின்ன வெங்காயம் - 15
தக்காளி (பெரியது) - 2
பூண்டு - 10 பல் அளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1½ ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - ஒரு கப் அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை
மசாலா அரைத்தல்:
முதலில் ஒரு சிறிய கடாயில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, தேங்காய் ஆகியவற்றைச் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும்.புளி கரைத்தல்: புளியைக் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து, வடிகட்டித் தனியாக எடுத்து வைக்கவும்.

அடிப்படைத் தாளிப்பு:
ஒரு பெரிய வடை சட்டியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்த பிறகு, அதில் பச்சை மிளகாய், வெந்தயம், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்த்து, கருகிவிடாமல் நன்றாக வதக்கவும்.குழம்பு சேர்த்தல்: வதக்கிய பிறகு, நீங்கள் அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும், கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொதிக்க விடவும்.கொதிக்க வைத்தல்: இரண்டு நிமிடங்கள் கழித்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து, பச்சை வாசனை போனதும், எண்ணெய் பிரிந்து மேலே வரும்.மீன் சேர்த்தல்: குழம்பு சரியான பதத்திற்கு வந்த பிறகு, நன்கு கழுவிச் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன் துண்டுகளைச் சேர்த்து வேக விடவும்.நிறைவு: மீன் துண்டுகள் நன்கு வெந்த பிறகு, அதன் மேல் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும்.மணமணக்கும் சுவையான மீன் குழம்பு ரெடி! இதைச் சுடச்சுட சாதத்துடன் பரிமாறி மகிழலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
