T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு!

 
T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு!

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. உலக கோப்பைக்கான இந்திய அணியில்2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 17ம் தேதி, இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் துவங்கி நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அணி பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.

டி 20 உலக கோப்பை போட்டிகளில், கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மாற்று வீரர்களாக ஷ்ரயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சகார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யுஸ்வேந்திர சஹாலுக்கு இம்முறை இடம் கிடைக்கவில்லை. அதே போல் தமிழக வீரரான யார்க்கன் மன்னன் என்று அழைக்கப்படும் நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை.

நடராஜன் காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். ஆனால் அவருக்கு குணமாகியும், அவர் எந்த போட்டியிலும் விளையாடாததால் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது.

டி20 உலக கோப்பை அணியில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெற்றுள்ளார். அதே போல் தமிழரான சுழற்பந்து வீச்சாளர் அருண் சக்கரவர்த்தியும் உள்ளார். இதனால் இந்தியா பலம் வாய்ந்த அணியாக டி20 உலகக் கோப்பையில் களம் இறங்க உள்ளது.

From around the web