இலங்கைக்கு கடத்த முயன்ற 70 லட்சம் மதிப்பிலான புளி பறிமுதல்.. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!

 
3,000 கிலோ புளி

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட பல்வேறு  பொருட்கள் அவ்வப்போது கடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கடலோர காவல்படை, புலனாய்வுப் பிரிவு மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இனிகோ நகர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் உடனடியாக சோதனை நடத்தப்பட்டு, சுமார் 70 பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி பிரிவு சுங்க துணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் பொட்டலங்களை பறிமுதல் செய்து சோதனை செய்ததில், தலா 50 கிலோ எடையுள்ள 60 பொட்டலங்களில் 3,000 கிலோ புளி மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, இதன் மதிப்பு ரூ.70 லட்சம். மேலும் 10 பொட்டலங்களில் பட்டாசுகள் மற்றும் நரம்பு வலி மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

பின்னர், சுங்க அதிகாரிகள் உடனடியாக பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் உண்மையான மதிப்பு முறையான விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளைக் கண்டதும் தப்பி ஓடிய கடத்தல்காரர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web