கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று தொடக்கம்!

 
சட்டப்பேரவை

இன்று ஜனவரி 6ம் தேதி காலை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்  தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் எப்போதும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது இது நாள் வரை மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2 ஆண்டுகளாக சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். ஒரு கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை முழுமையாகப் படிக்காததால், சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சட்டப்பேரவை

இந்நிலையில், நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. காலை 9.30  மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று காலை 9 மணிக்குப் புறப்படும் ஆளுநர், சுமார் 9.20 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகை தருகிறார். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநர் ரவியை வரவேற்று, பேரவைக்குள் அழைத்துச் செல்கிறார்.  

சட்டப்பேரவை

பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசித்து முடித்ததும், அதன் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்து முடிப்பார். அதனைத் தொடர்ந்து  நடைபெறும்  சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில் பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில்  சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

நாளை ஜனவரி  7ம் தேதி சட்டப்பேரவை கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்  மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதன் பிறகு 2லிருந்து 3 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதமும், பதிலுரையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web