4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு... ஈரோடு கிழக்குத் தொகுதியில் களைக்கட்டும் ட் தேர்தல் திருவிழா!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. பிரதான எதிர்கட்சிகள் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ள நிலையில், திமுகவும், நாம் தமிழர் கட்சியும் நேரடியாக களத்தில் மோதுகின்றன.
ஆளுங்கட்சி, பணபலம், அமைச்சர்களின் பிரச்சார பலம், காவல் துறையினரின் ஒத்துழைப்பு என்று தொகுதி முழுக்கவே திமுக வேட்பாளர் தன்னுடைய பலத்தைக் காட்டி வருகிறார். பிரச்சாரத்தில் பின் தங்கியிருந்தாலும் கூடுமானவரை உற்சாகமாகவே பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் வேட்பாளர்.
பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 3ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குபதிவு நடைபெறும் நாளான பிப்ரவரி 5ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், அதைப் போலவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 8ம் தேதியும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளையும், மதுபான பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எப்எல்2, எப்எல்3, எப்எல்ஏ மற்றும் எப்எல்7 ஆகிய உரிமத்தலங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) நடத்தும் அனைத்து மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
இந்த நாட்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!